இலங்கை சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, இவ்வாண்டுக்குள் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், சீனாவின் எவ்வித ராணுவ நடவடிக்கைக்கும் ஹம்பாந்தோட்டையில் இடமில்லை. என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில், இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்,
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு அருகில் மாபெரும் தொழில்நுட்ப வலயமொன்றை உருவாக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமொன்று கடந்தாண்டில் இடம் பெற்றமையையும், சீனாவுடன் இலங்கையின் 65 வருட நட்புறவையும் நினைவு கூர்ந்துள்ளார்.
அத்தோடு ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில், சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்படுகின்ற போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM