கடந்த ஆட்சியில் பஷில் ராஜபக் ஷவிற்கு தேவையான விதத்திலேயே தேர்தல் முறை மாற்றங்கள் ஏற்பட்டது. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றத்தின் போது தலைமைத்துவ சபை நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தேர்தல் முறை மாற்றம் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஏற்படுத்தப்படவில்லை. மாறாக கடந்த ஆட்சியில் பஷில் ராஜபக் ஷவின் தேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எல்லை நிர்ணயங்கள், தொகுதி பிரிப்பு தொடர்பாக பல பிரச்சினைகள் உள்ளன. சில இடங்களில் தமக்கு தேவையான விதத்தில் கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
வீட்டின் முன்பக்கம் ஒரு தொகுதிக்கும், சமையலறை இன்னொரு தொகுதிக்குமென பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் இன, மத மற்றும் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக சிந்திக்கவில்லை. நாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினை தலை தூக்கும் விதத்திலேயே எல்லை நிர்ணயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
எனவே இது தொடர்பாக ஆராய்வதற்கு அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் முன்னைய தேர்தல் முறை மாற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே எல்லை நிர்ணயம் மீள திருத்தப்பட வேண்டும். அதற்கமைய தேர்தல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு காலம் எடுக்கும். இதனை காரணமாக வைத்து தேர்தலை பின்போடுவது நியாயமானது.
உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், புதிய தேர்தல் முறை ஏற்படுத்தப்படும் வரை காத்திருக்காது தற்போதுள்ள முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதோடு, பல புதிய பதவி மாற்றங்களும் செய்யப்படவுள்ளன. தலைமைத்துவ சபை தற்போது இயங்கு வதில்லை. எனவே அது இரத்து செய்யப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM