சமாதானமும் சுபீட்சமும் பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்டவேண்டும் : சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Published By: Priyatharshan

04 Feb, 2017 | 09:49 AM
image

நீதி மற்றும் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புதி­யதோர் தேசத்தில் சமா­தா­னமும் சுபீட்­சமும் கிடைக்­கப்­பெற்ற மக்­க­ளாக வாழும் பாக்­கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது;

மனி­தர்கள் தமது சுதந்­தி­ரத்­துக்­காக மேற்­கொண்ட போராட்­டங்­க­ளினால் மானுட வர­லாறு அழகு பெற்­றுள்­ளது. இலங்­கை­ய­ரான நாமும் அவ்­வா­றான பெரு­மை­மிகு சுதந்­திரப் போராட்ட வர­லாற்­றுக்கு உரித்­தா­ன­வர்­களே. பல நூற்­றா­ண்­டு­க­ளாக நீடித்த மன்­ன­ராட்சிக் காலத்­தி­லி­ருந்து நவீன ஜன­நா­யகம் வரை நாம் கடந்து வந்த பய­ணத்தில் அவ்­வா­றான போராட்­டங்கள் பற்­றிய இத­மான நினை­வு­க­ளுடன் கசப்­பான நினை­வு­களும் பதி­வாகி இருக்­கின்­றன. சுதந்­தி­ரத்­துக்­காக பாடு­பட்ட எம் முன்­னோர்­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் தியா­கத்­துக்கு என்றும் நாம் கடன்­பட்­ட­வர்­க­ளாவோம். உண்­மை­யி­லேயே அவர்கள் சிந்­திய வியர்­வையும், இரத்­தமும், சுவா­சமும் கலந்த தியா­கத்­தையே வர­லாறு எமக்கு உணர்த்­து­கின்­றது.

69 ஆவது சுதந்­திர தின விழா நடை­பெறும் இவ்­வே­ளை­யா­னது, எமது நாட்­டிற்கு மிகவும் தீர்க்­க­மான சவால்­மிக்­க­தொரு சந்­தர்ப்­ப­மாகும். அண்­மைய வர­லாற்றில் நாம் அடைந்த ஜன­நா­யக சுதந்­தி­ரத்தைப் பாது­காத்து, தேசிய சிந்­த­னையின் ஊடக அனைத்து இனங்­களும் சமா­தா­னத்­துடன் வாழக்­கூ­டிய நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யகம், சுதந்­திரம் போன்ற வார்த்­தை­களைக் கொண்டு வர்­ணிக்­கப்­பட்ட இருண்ட யுகத்­தி­லி­ருந்து நாம் விடு­தலை பெற்­றுள்ளோம். 

இருளில் மூழ்கிக் கொண்­டி­ருந்த  ஜன­நா­ய­கத்­தையும் மனி­தா­பி­மா­னத்­தையும் மீண்டும் சுடர் ­விட வைப்­ப­திலும் நாம் வெற்­றி­பெற்­றுள்ளோம். ஆயினும் சுதந்­தி­ரத்தை மேலும் அர்த்­த­முள்­ள­தாக்க வேண்­டு­மாயின் வறு­மை­யி­லி­ருந்தும் நோய்­க­ளி­லி­ருந்தும் விடு­ப­டு­வது மட்­டு­மன்றி, இனஇ மத, சாதி பேதம் போன்ற வரை­ய­றைக்குள் சிறைப்­பட்டு மோச­மான ஆத்­மீக மற்றும் பண்­பாட்டு வறு­மைக்­குட்­பட்­டுள்ள மக்­க­ளையும்இ சமூ­கத்­தையும் அவற்­றி­லி­ருந்து விடு­வித்து, மனித உரி­மைகள் மற்றும் நீதி நெறி­களை மதிக்கும் தேசத்தை உரு­வாக்க வேண்டும்.

நீதி மற்றும் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புதி­யதோர் தேசத்தில் சமா­தா­னமும் சுபீட்­சமும் கிடைக்­கப்­பெற்ற மக்­க­ளாக வாழும் பாக்­கியம் எமக்கு கிட்ட வேண்டும். அறி­யா­மையை அறி­வி­னாலும், பொய்­மையை வாய்­மை­யி­னாலும், பழி தீர்க்கும் எண்ணத்தைக் கருணையினாலும் இம்சையை அஹிம்சையினாலும் வெற்றி கொள்ளக் கூடிய மனிதத்தை மதிக்கும் சுதந்திரத்தின் சுவர்ண பூமியாக எமது தாய்நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33