ஏழு முஸ்லீம் நாடுகளுக்கெதிராக டிரம்ப் விதித்துள்ள விசா தடை உத்தரவை அவர் நீக்கவேண்டும். என ஐ.நா. பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள விசாத்தடைகள் பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த விடயம் பற்றி பேசியுள்ள அவர், ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்திருப்பது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது. மாறாக குறித்த மக்களுக்கு கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும்.
அத்தோடு மேற்கண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் நுழையாமல் தடுப்பதன் மூலம் மட்டும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த வரும் தீவிரவாதிகள் சட்ட பூர்வமாக நாட்டினுள் நுழைய மாட்டார்கள்.
அதனால் அம்மக்கள் மீதான தடையை நீக்க வேண்டுமென்பது தனது கருத்தெனவும், டிரம்ப் தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கு தெரிவு செய்துள்ளது சரியான வழியல்ல என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM