தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு அவலட்சணமான தோற்றமுடையவர்களாக மாறிவிடுகிறார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, தொடர் சிகிச்சையைப் பெற்றால். இதனை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே குணப்படுத்திவிடலாம்.
தொழுநோய்களில் இரண்டு வகையிருக்கிறது. அதில் உணர்ச்சியற்ற தேமல் போன்ற தொழு நோய் (Tuberculoid) குறித்த விழிப்புணர்வை மட்டுமே மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்நோய் யாருக்கும் பரவாது. Lepromatous என்ற தொழுநோயின் மற்றொரு வகையைக் குறித்து யாருமே அறிந்திருக்கவில்லை. இதற்கான அறிகுறி எளிதில் தெரியாது. இது உடலெங்கும் பரவிய பின்னர் தான் கைகளிலும் கால்களிலும் உணர்ச்சியை குறையவைத்து தன்னுடைய அறிகுறியை வெளிப்படுத்தும். இதனை யாரும் அவ்வளவு எளிதாக கண்டறிவதில்லை. உடலில் இருக்கும் மைக்ரோபாக்டீரீம் என்ற ஒருவகையான வைரஸ் கிருமிகளால் இவை பரவுகிறது.
புருவ முடிகள் உதிர்ந்து போகுதல், எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம், காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல், குதிக்காலில் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டு அவை பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல் இவையெல்லாம் பரவும் தன்மைக் கொண்ட Lepromatous என்ற தொழுநோயின் அறிகுறிகளாகும்.
அதனால் இத்தகைய அறிகுறிகளுடன் இருப்பவர்கள் மருத்துவர்களையோ அல்லது தோல் மருத்துவ நிபுணர்களையோ சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும். தொழுநோய் என்று உறதிப்படுத்தப்பட்டால், இவர்கள், தினமும் மூன்று மாத்திரைகள் வீதம் ஒரு வருடம் வரை சாப்பிட்டு மீண்டும் பரிசோதனை செய்து ,நோயின் கட்டுப்பாடு குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இதைத் தான் மல்டி டிரக் தெரபி என்கிறார்கள். இவ்வகையான சிகிச்சையைத் தொடர்ந்தால் இந்நோயை முழுமையான அளவில் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
டொக்டர் செந்தில்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM