அரிசியை 66 ரூபாவுக்கு விற்பனை செய்யுங்கள் : நிதி அமைச்சர் கோரிக்கை

Published By: Robert

03 Feb, 2017 | 10:50 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

மக்­க­ளுக்கு சலுகை வழங்கும் நோக்­குடன் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரி­சிக்கான வரிகள் அனைத்­தையும் நீக்­கி­யுள் ளோம். இதன் பய­னாக தற்­போது சந்­தை யில் ஒரு கிலோ கிராம் அரி­சியை 66 ரூபா­ வாக விற்க முடியும். ஆனால் வர்த்­த­கர்­க­ளினால் அரி­சியின் விலை இது­வ­ரையில் குறைக்­கப்­பட வில்லை. இது பெரும் அநீ­தி­யாகும். ஆகவே மக்­களின் மீது அக்­கறை கொண்டு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரி­சியை புதிய விலையின் பிர­காரம் உட­ன­டி­யாக விற்­பனை செய்­யு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வர்த்­த­கர்­க­ளிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் அரிசி தட்­டுப்­பாடை போக்கும் வகையில் 23 ஆயி­ரத்து 800 மெட்ரிக் டொன்  அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் அரிசி இறக்­கு­மதி செய்­யப்­படும். தட்­டு­பாட்டின் கார­ண­மாக உயர்ந்­துள்ள அரி­சியின் விலையை குறைக்கும் நோக்­குடன் அரிசி மீதான அனைத்து வரி­க­ளையும்  நீக்­கி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

நிதி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் அரிசி தட்­டுப்­பாடு பெரு­ம­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இதன்­கா­ர­ண­மாக அரிசி விலையும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே நாட்டு மக்­க­ளுக்கு குறைந்த விலையில் அரி­சியை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் வெளி­நாட்­டி­லி­ருந்து அரி­சியை இறக்­கு­மதி செய்ய திட்­ட­மிட்டோம். இதன்­பி­ர­காரம் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரிசி நான்கு நாட்­க­ளுக்கு முன்­பா­கவே சந்­தைக்கு விநி­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

மக்­களின் நல­னுக்­காக இறக்­கு­மதி வரி உள்­ளிட்ட அனைத்து வித­மான வரி­க­ளி­லி­ருந்து அரிசி இறக்­கு­ம­தியை விலக்­க­ளித்தோம். ஆகையால் குறித்த வரி விதிப்­புகள் நீங்­க­லாக ஒரு கிலோ கிராம் அரி­சியை 66 ரூபா­விற்கு தற்­போ­தைக்கு விற்­பனை செய்ய முடியும். ஆகவே குறைந்­த­ளவில் அரிசி விற்­பனை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் எடுத்­தி­ருந்தும் வர்த்­த­கர்கள் குறித்த நிவா­ர­ணத்தை மக்­க­ளுக்கு இன்னும் வழங்­க­வில்லை. 

ஆகவே அர­சாங்கம் என்ற வகையில் நாம் செய்ய வேண்­டிய காரி­யத்தை செய்த போதிலும் இன்னும் வர்த்­த­கர்­க­ளினால் மக்­க­ளுக்கு போய் சேர வேண்­டிய சலுகை செல்­ல­வில்லை. ஆகவே தயவு செய்து வர்த்­த­கர்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரி­சியை    புதிய விலையின் பிர­காரம் நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்டும்.

ஏற்­க­னவே 76 ரூபா­வாக குறைக்­கப்­பட்ட அரி­சியின் விலையை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தலை­யிட்டு வரிகள் விலக்­க­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் மேலும் 10 ரூபா குறைக்­கப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் தற்­போது ஒரு கிலோ கிராம் அரி­சியின் விலை 66 ரூபா­வாக குறைக்­கப்­பட வேண்டும் கணிப்­பி­டு­கின்றேன் என்றார்.

கேள்வி   தற்போது ஒரு கிலோக கிராம் அரிசியின் விலை எத்தகையதாக அமைய வேண்டும்?

பதில்  மன்னிக்கவும். இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்த கேள்வியை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21