பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வருகிறார். இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பேகம் கல்ஸும் ஷெரிப் அம்மையார் ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்கவுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இலங்கைக்கும்-பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
அத்துடன் இந்த விஜயத்தின் போது
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதுடன் பாகிஸ்தான் பிரதமர் வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி தலதாமாளிகைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இன்று இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமருக்கான உத்தியோகப்பூர்வ வரவேற்பு வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதுடன் அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இதன்போது பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருந்துபசாரமொன்றையும் வழங்கவுள்ளார்.
அத்துடன் சுகாதாரம், விஞ்ஞானம், தொழிற்நுட்பவியல், வியாபாரம், புள்ளிவிபரவியல், இரத்தினங்களும் ஆபரணங்களும் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உடன்படிக்கைகளும் இந்த இருதரப்பு சந்திப்பபோது கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனும் பாகிஸ்தான் பிரதமர் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தவிருக்கிறார். சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு சினமன்ட் லேக்சைட் ஹோட்டலில் பாகிஸ்தான் பிரதமர் விசேட விரிவுரையொன்றையும் ஆற்றவுள்ளதுடன் இலங்கை- பாகிஸ்தான் தொடர்புகள் என்ற தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெறவுள்ளது.
இதேவேளை இருதரப்பு சந்திப்புக்களையடுத்து நாளை கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமர் தலதாமாளிகைக்கு செல்லவுள்ளதுடன் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் நிகழ்விலும் கலந்துகொள்வார். அத்துடன் பேராதனை பூங்காவிற்கு செல்லவுள்ள பாகிஸ்தான் பிரதமர் அங்கு தனது இலங்கை விஜயத்திற்கான ஞாபகார்த்தமாக தாவரமொன்றை நடவுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு விஜயமேற்கொண்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவருடம் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு அரச விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM