திறமையான வழிநடத்தல் மற்றும் வசீகரமான தலைமைத்துவம் போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெரும் புகழ் தேடித் தந்திருக்கும் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணி நினைவுப் பரிசளித்து கௌரவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இ-20 போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்திய அணி வீரர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகளே கலந்துகொண்ட இந்த பிரத்தியேக நிகழ்வில், இந்திய அணி சார்பில் தோனிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மரத்தாலான ஒரு சட்டகத்தில், தோனியின் மார்பளவுப் படமும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் பெற்ற முக்கியமான நான்கு வெற்றிகளைக் குறிக்கும் வகையில் நான்கு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
2007 - முதல் இ-20 சர்வதேசத் தொடர், 2011 மற்றும் 2013 - உலகக் கிண்ணப் போட்டித் தொடர், 2009ஆம் ஆண்டு டெஸ்ட் அணிகளின் தரவரிசைப்படுத்தலில் முதல் இடம் என்பவற்றைக் குறிக்கும் வகையிலேயே இந்த நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அதன் கீழே, ‘முன்னுதாரணமான, தலை சிறந்த தலைவருக்கு நன்றி - இந்திய கிரிக்கெட் அணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM