அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காதணி துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு அதில் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த அஷ்லே கிலவெ என்ற பெண்ணின் செல்லப்பிராணியாக வளர்த்து வந்து பல் பைதான் என்ற பாம்புடன் தினந்தோறும் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளவர்.
இந்நிலையில், குறித்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்து பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் சிக்கி கொண்டது.
பாம்பினை தனது காதணி துவாரத்திலிருந்து எடுப்பதற்கு வைத்தியசாலையிற்கு சென்றவேளையில் காதில் இருந்த பாம்பினை பார்த்த வைத்தியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் பாரிய முயற்சியின் பின் காதணி துவாரத்திலிருந்து பாம்பினை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிகிச்சையளித்த வைத்தியர்கள் இப்படி ஒரு சிகிச்சையை நாங்கள் இதுவரை மேற்கொண்டதில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் பாம்பு தனது காதணி துவாரத்தில் சிக்குண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார். குறித்த படம் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM