வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே ஏற்பட்தையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச. சாலை சாரதி மீது முல்லைத்தீவிலிருந்து வந்த தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதி படுகாயடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதிய பேருந்து நிலைய கைகலப்பினையடுத்து இ.போ.ச சாரதிகள் தமது தூரசேவை பேருந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து தூர சேவை பேருந்துகள் அனைத்தையும் புதிய பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேவைகளை மேற்கொள்ளுமாறும் சேவை மேற்கொள்ளாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடந்த மாதம் அரச அதிபர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடமாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர், தனியார் பேருந்து, அரச பேருந்து சாரதிகள் ஆகியோர் இடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தற்போது சுமுகமான போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM