காணாமல் போனதாக கூறப்பட்ட டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உதவித் தலைவர் எம்.எஸ். மங்கள இன்று காலை களுத்துறை இங்கிரிய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள டெலிகொம் நிறுவனத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர் கடந்த சனியன்று (28) நள்ளிரவில் வீட்டுக்கு வருவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகவும் எனினும் அவர் வீடு வந்து சேரவில்லை எனவும் அவரது மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார்.
இதேவேளை, தமது சங்கத்தின் உப தலைவர் பன்னிப்பிடியவிலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, அவர் காணாமல் போனதாக அனைத்து இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமந்த விஜேசூரிய தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் காணாமல் போன நபரை இங்கிரிய பகுதியில் இன்று கண்டு பிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM