கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கவிருந்த 19ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, இன்னும் ஓரிரு மாதங்களில் இடம்பெறும் என பாகிஸ்தானின் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை, சார்க் நாடுகளின் பொதுச்செயலாளராகவுள்ள அர்ஜுன் பகதூர் தாபா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைப் பிரச்சனை விவகாரத்தில், பாகிஸ்தான் கொண்டுள்ள பங்கின் காரணமாக இரு நாடுகளிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் 19 ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடக்கவிருந்தது.
இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம். என இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மாநாட்டை புறக்கணித்ததால் மாநாடு நடைபெறவில்லை.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே உள்ள உறவில் பதற்றம் குறைந்து வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை, சார்க் நாடுகளின் பொதுச்செயலாளராகவுள்ள அர்ஜுன் பகதூர் தாபா, சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் பேசியுள்ள சர்தார் அஜீஸ், 19ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டை, பாகிஸ்தான் நடத்துவதற்கு தயாராகவே இருக்கிறது. விரைவில் சார்க் மாநாடு நடக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM