நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் 2016ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதற்கமைய சிங்கள, - தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2016 ஜனவரி 04 ஆம் திகதி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
இரண்டாம் தவணை 2016 ஏப்ரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஜூலை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 2016 டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2016 ஜனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 ஏப்ரல் 11ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவு பெறவுள்ளது. இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இரண்டு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டம் 2016 ஏப்ரல் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, 2016 ஜூன் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவுபெறவுள்ளது. இரண்டாம் கட்டம் 2016 ஜூலை மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 2016 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 22ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 2016 டிசெம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. இதேவேளை பாடசாலை தவணை அட்டவணை தொடர்பாக வெளியிடப்பட்ட 97/5 சுற்று நிருபத்தின் படி இலங்கையின் சகல பாடசாலைகளும் வருடத்திற்கு 210 நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென தெளிவுபடுத்தப்பட்டிருப்பினும் 2016ஆம் வருடத்தில் இடம்பெறும்
அரசாங்க விடுமுறை தினங்களை கருத்திற் கொண்டு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்துவதற்கு முடியாதுள்ளதால் 2016ஆம் ஆண்டு அரசாங்க அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் 197 நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM