இரண்டு எலும்புகள் இணையக்கூடிய பகுதியை மூட்டு என்கிறோம். அதில் அழற்சி ஏற்பட்டு வலி வீக்கம் போன்றவை ஏற்பட்டால் அதற்கு ஓர்த்ரைடீஸ் என்று பெயர். மூட்டுகளில் வலி ஏற்பட்டால் எம்மால் விருப்பபடியோ இயல்பாகவோ நடக்க இயலாது. சௌகரியமாக உட்கார இயலாது. உணவை கைகளால் பிசைந்து சாப்பிட இயலாது. எம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் மூட்டுகளின் உதவி தேவை. இத்தகைய வலி வந்தால், அவர்களை இந்த பாதிப்பு முடக்கி வைத்துவிடும்.
ஓர்த்தரைடீஸ் மரபியல் காரணங்களாலும், இள வயதில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், மாசடைந்த சுற்றுப்புற சூழல் காரணிகள் என பலவற்றை குறிப்பிட்டார்கள்.தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக டைப் 2 வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவீடு இயல்பைக் குறைவதன் மூலமாகவும் ஓர்த்தரைடீஸ் வருகிறது என்றும், அதற்கு செப்டிக் ஓர்த்தரைடீஸ் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.
மூட்டில் வலி மற்றும் வீக்கம் இருந்தால் உடனடியாக சிகிச்சைப் பெறவேண்டும். அதற்கு முன்னர் ரூமட்டாலாஜிஸ்ட்,(Rheumatalogist) டயபட்டாலாஜிஸ்ட், (Diabatalogist) ஓர்த்தோபீடிக் ஸ்பெஷலிஸ்ட் (Orthopedic surgeon) ஆகிய மூவரையும் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையையும் பெறவேண்டும். இதனை மருந்து மாத்திரைகளின் மூலமாகவே கட்டுப்படுத்த இயலும்.
டொக்டர் V.கிருஷ்ணமூர்த்தி M.D., D.M.,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM