ஹட்டன் போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் கடந்த 22.11.2017 அன்று சேதமாகிய பாலம் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் பாலம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக நேற்று மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன அவரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனராஜ், பிலிப்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாலம் 22.11.2017 அன்று போக்குவரத்து செய்ய முடியாத அளவில் உடைந்து சேதமாகியது. இதனையடுத்து இப்பாலத்தை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவ்வழியாக செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் பொது மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இப்பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாலம் புனரமைக்கப்பட்டது. எனினும் இப்பாலத்தின் திறப்பு விழா இடம்பெறுவதற்கு முன்பு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா உள்ளிட்ட அவ்கட்சியின் பலர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். இதனால் அவ் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் சூழ்ந்துள்ளனர்.
இதனால் இரு கட்சிகளுக்குமிடையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவிடக்கூடாது என்பதிற்காக ஹட்டன் பொலிஸாரினால் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
எது எவ்வாறாகயிருந்தாலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா உள்ளிட்ட கட்சியின் பலர் புனரமைக்கப்பட்ட பாலத்தினை பார்வையிட்டதுடன், இப்பாலத்தின் புனரமைப்பில் தமது பங்களிப்பும் உள்ளதாவும் மக்களுக்கு தெளிவூட்டல் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
அதன்பிறகு வருகை தந்த மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன மற்றும் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இவ்பாலத்தை திறந்து வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM