மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன.
வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று, மாட்டுக் சுட்டத்தின் மீது மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் சிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் பலியான மற்றும் காயமடைந்த மாடுகளின் பெறுமதி 15 இலட்சத்திற்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதோடு அதிகளவான கால்நடைகளும் அழிந்து வருகின்றன.
கால்நடைகளால் பயன்பெறும் உரிமையாளர்கள் அவற்றை உரியவகையில் வளர்த்து பராமரித்தால் இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு, பெருமளவில் வருமானத்தை ஈட்டித்தரும் கால்நடைகள் அநியாயமாக அழிந்து போவதை தடுக்கலாம் என்பதோடு அநேகமான விபத்துக்களையும் மனித உயிரிழப்புக்களை தவிர்க்கமுடியுமென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM