தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை வீர்ர்களின் திறமை மற்றும் அணித் தலைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் இலங்கை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மெத்தியூஸ் விலகுவதற்கு இது சரியான தருணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியதையடுத்து அணியின் மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்தது விமர்சனங்கள் வலுப்பெற தொடங்கின.
எனினும் இரண்டாவது இருபது 20 போட்டியில் மெத்தியூஸின் அதிரடியுடன் இலங்கை திரில் வெற்றி பெற அனைவரின் கண்களும் இலங்கை அணி பக்கம் திரும்பியது.
இந்த போட்டியின் பின்னர் மெத்தியூஸ் மீதான விமர்சனங்கள் குறைவடைந்ததோடு சொந்த தேவைக்காக மெத்தியூஸ் நாடு திரும்பினார்.
உங்கள் மீதான விமசர்னங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதைதவிர சரியான வழி எதுவும் இல்லை என இரண்டாவது போட்டியின் வெற்றியின் பின்னர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான நேற்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்காமல் இருந்தமையால் இலங்கை அணியின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.
எனினும் நேற்றை போட்டியின் முடிவில் இலங்கை அணி தனது அபார திறமையை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மஹே ஜயவர்தன, இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது. குறிப்பாக நிரோசன் டிக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அணியின் திறமை மீது அனைவரும் நம்பிக்கை வைத்து பொறுமையுடன் ஆதரவு வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM