இலங்கை வசமுள்ள கச்சை தீவில் பலவந்தமாக இன்று (26) இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் கையளித்தார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது இந்திய அரசு. இதன்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியர்களுக்கு உரிமை இருந்த போதிலும் இந்திய மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை அரசு தடை விதித்து வருகிறது. மேலும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கச்சத்தீவை மீட்க மாநில, மத்திய அரசுகளிடம் பல முறை கோரிக்கைகள் விடுத்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, குடியரசு தினமான நாளை (இன்று - 26) கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கும் விதமாக அங்கு இந்திய சுதந்திரக் கொடி பறக்கவிடப்படவேண்டும். இல்லாவிட்டால், இந்து மக்கள் கட்சியின் சார்பில் எமது தொண்டர்கள் அங்கு இந்தியக் கொடியை ஏற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM