இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பெண்களின் அங்கத்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கக்கோரி கையெழுத்து வேட்டையொன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி, மாகாணசபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்த கையெழுத்துப்பெறும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
நான்கு மாகாணங்களிலும் 19 மாவட்டங்களிலும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் செல்வி மு.கிருத்திகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது பெருமளவான பெண்கள் தமது கையொப்பங்களை இட்டு பெண்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM