(ரி. விரூஷன்)
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தமது அடையாளம் எதுவும் பொலிஸாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணின் தாலிக்கொடியையும் அபகரித்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டார் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சாதுரியமாக செயல்பட்டு சந்தேக நபர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 34 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணாவார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலைதோன்றியுள்ளதாகவும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் செய்தியார் தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்திற்கு முன்னாள் பொதுமக்கள் திரண்டுள்ளதால் தற்போதும் அங்கு பதற்றநிலை நிலவிவருகின்றது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முயன்றபோதே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
எனினும் குறித்த் சந்தேக நபர்களை பொலிஸார் யாழ்ப்பாணத்திறகு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
இதேவேளை, வெளியிடத்தில் இருந்து இரும்பு வியாபாரத்திற்காக அங்கு வந்த நபர்களே இவ்வாறு குற்றம்புரிந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM