மணிக்கு சுமார் 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற பி.எம்.டபிள்யு. கார் ஒன்று ஊபர் வாடகைக் கார் மீது மோதியதில், வாடகைக் காரை ஓட்டிச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிறன்று இரவு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
சொஹைப் கோலி (24) என்பவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி. இவர் கடந்த ஞாயிறன்று இரவு தனது பி.எம்.டபிள்யூ. ரகக் காரில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தார்.
டெல்லியின் மையப் பகுதியில் கோலி சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த ஊபர் வாடகைக் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட கார் சில அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பின்பே நின்றது. மோதிய வேகத்திலேயே, குறித்த வாடகைக் காரைச் செலுத்திச் சென்ற நஸ்ருல் இஸ்லாம் (30) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.
நஸ்ருலின் வருமானத்தை நம்பியே அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தனது வேலையை இழந்த இவர், ஊபர் நிறுவனத்தில் சம்பவ தினத்தன்று காலையே வேலைக்குச் சேர்ந்திருந்தார்.
விபத்தையடுத்து கோலி தப்பிச் சென்றபோதும், நேற்று தனது தந்தையுடன் பொலிஸில் ஆஜரானார்.
கோலியின் மீதான பொலிஸ் விசாரணையின்போது, மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தவில்லை என்று கூறிய கோலி அதீத வேகத்தில் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், முன்னால் சென்ற கார் திடீரென்று நிறுத்தப்பட்டதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM