கண்டி- குருநாகல் பிரதான வீதியில் கலகெதரைப் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கலகெதர அக்கரவத்த என்ற இடத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பஸ்வண்டியில் பயணித்த 13 பெண்கள் உற்பட 15 பேர் காயமடைந்து கலகெதரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலகெதரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேடு பள்ளமான இவ்விடத்தில் பஸ் சாரதியால் வாகனத்தை கட்டுப் படுத்த முடியாது பள்ளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனப்பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலகெதரைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM