வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கமராவுடன் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கள் தெரிவித்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர்.
தமது காணாமல் போன பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் தர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரி இத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இரவிரவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கையில் கமராவுடன் சென்று அம் மக்களையும் அவர்கள் கூறும் கருத்துக்களையும் ஒளிப்பதிவு செய்தும் புகைப்படம் எடுத்தும் வருவதாகவும் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லையெனவும் புலனாய்வாளர்களின் இச் செயற்பாடு குறித்து காணாமல் போனவர்களின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM