இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு

Published By: MD.Lucias

02 Jan, 2016 | 07:50 AM
image

கடந்த காலங்­களில் நாட்டில் காணப்­பட்ட அர­சியல், இன ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்­னெ­டுத்து வரும் செயற்­பா­டுகள் இந்த ஆண்­டிலும் தொடரும். அதேபோல், இந்த ஆண்டு இறு­திக்குள் அர­சியல் பிரச்­சினை தீரும் என அர­சாங்­கத்தின் ஊட­கப்­பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

 

அர­சாங்­கத்தை நம்பி எம்­முடன் கைகோர்த்­த­மைக்கு நாம் எப்­போதும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். அதேபோல் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட தாயா­ராக உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த ஆண்­டுக்குள் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­ப­டு­வது உறுதி என தமிழர் தரப்பு தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்கம் எவ்­வா­றான வகையில் செயற்­படும் என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்,

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஆண்டு ஆரம்பம் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் மிகவும் முக்­கி­ய­மான ஆண்­டாக அமைந்­தது. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஐந்து ஆண்­டு­களில் நாட்­டையும் மக்­க­ளையும் அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்தி நாட்டை சர்­வா­தி­கா­ரத்தின் பக்கம் கொண்டு சென்ற மஹிந்த அர­சாங்­கத்தை வீழ்த்தி ஜன­நா­யக, மக்கள் நலன் பேணும் அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். அதேபோல் நாட்­டுக்கு எதி­ரான அழுத்­தங்கள், சர்­வ­தேச படை­யெ­டுப்­புகள் அனைத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளோம்.

கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்­வா­தார முறை­யிலும் மக்கள் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கப்­பட்டு பாரிய கஷ்­டங்­களை அனு­ப­வித்து வந்­தனர். ஆனால் புதிய அர­சாங்­கத்தின் வரவு செலவு திட்டம் மக்­களை பொரு­ளா­தார சுமையில் இருந்து காப்­பாற்றும் வகையில் அமைந்­துள்­ளது. அவ்­வா­றான ஒரு நல்ல மாற்றம் ஏற்­பட்­டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மக்­க­ளுக்கு மிகவும் சிறந்த ஆண்­டாக நிறை­வ­டைந்­துள்­ளது.

அதேபோல் ஆரம்­ப­மா­கி­யுள்ள இந்த புது வருடம் கடந்த ஆண்­டைப்­போல மேலும் பல நன்­மைகள் ஏற்­படும் வகையில் அமையும் என்ற வாக்­கு­று­தியை எம்மால் கொடுக்க முடியும். மூவின மக்­களும் தமது உரி­மை­க­ளுடன் வாழக்­கூ­டிய வகையில் நாடு என்ற ரீதியில் அனை­வரும் ஒன்­றி­னையும் ஒரு ஆட்­சியை எம்மால் முன்­னெ­டுக்க முடியும். அதேபோல் பொரு­ளா­தார ரீதி­யிலும் அர­சியல் ரீதி­யிலும் வளர்ச்சி கண்ட நாடாக இலங்­கையை மாற்றும் நட­வ­டிக்­கை­களை பிர­தான இரண்டு கட்­சி­களின் தலை­மைத்­து­வமும் மேற்­கொள்ளும்.

குறிப்­பாக கடந்த காலங்­களில் நாட்டில் காணப்­பட்ட அர­சியல் மற்றும் இன ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்­னெ­டுத்து வரும் செயற்­பா­டுகள் இந்த ஆண்­டிலும் தொடரும். புதி­தாக அர­சியல் அமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் தலை­மையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து கலந்­தா­லோ­சித்து வரு­கின்­றன. ஆகவே புதிய அர­சியல் அமைப்பில் நிச்­ச­ய­மாக அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஆட்சி மாற்­றத்தின் போராட்­டத்தில் தமிழ் மக்கள் மிகப்­பெ­ரிய பங்­கா­ளர்­க­ளாக காணப்­பட்­டனர். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. எம்மை நம்பி எம்­முடன் கைகோர்த்­த­மைக்கு நாம் எப்­போதும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். அதேபோல் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட தாயா­ராக உள்ளோம்.

கடந்த காலத்தில் விட்ட தவ­று­களை இந்த அர­சாங்கம் விடப்­போ­வ­தில்லை. நாம் வடக்கு கிழக்கு மக்­களை அக்­க­றை­யுடன் கவ­னித்து வருகின்றோம். அதேபோல் சிங்கள தமிழ் உறவையும் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினை தீரும். அதேபோல் நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். அதை தொடர்ந்தும் தக்கவைப்போம் என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56