யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதி யில் கள்ள நோட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 15ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை யும் அதனை அச்சடிக்கப் பயன்படுத்திய கணனி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆறு பேர் நெல்லியடியில் உள்ள மதுபான விடுதிக்கு மது அருந்த சென்றுள்ளனர். இவர்கள் மதுவருந்தி முடிய பின்னர் அதற்கான பணத்தை செலுத்தியுள்ளனர்.
குறித்த விடுதியில் வாடிக்கையாளரிடம் பணம் பெறும் போது அப் பணம் போலிப் பணமா இல்லையா என்பதை குறித்துப் பரிசீலித்து பெற்றுக்கொள்வது வழமையாகும் . அந்த வகையில் இப் பணமும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் வழங்கிய நாணயத்தாள்கள் போலியனது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த மதுபான விடுதியாளர்கள் உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த ஜந்து பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளையடுத்து அவர்களிடமிருந்து 15ஆயிரம் ரூபா வரையான போலிநாணயத்தாள்களையும் அதனை வடிவமைக்க பயன்படுத்திய கணணி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஜந்து பேரையும் தவிர இவர்களுக்கு போலிநாணயத்தாளினை விநியோகம் செய்தவர் மற்றும் இவற்றுக்கு சூத்திரதாரியாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் தலமறைவாகி இருப்பதாகவும் அவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM