(எம்.நேசமணி)
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்ட ரத்ன தேரர், சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதால், அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதனடிப்படையில், இது சம்பந்தமாக அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இந்த விடயம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM