தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும், அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று தமிழகமுதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்தவேண்டும் என்று கூறி தமிழகமெங்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் அறவழியில் 5வது நாளாக போராடி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று முன் தினம் டெல்லிக்கு சென்று, நேற்று பிரதமரைப் பார்த்து தமிழகத்தின் கோரிக்கைக்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரதமர் மோடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் உதவ இயலாது என்று கைவிரித்துவிட்டார். இதனால் உடனடியாக தமிழகத்திற்கு திரும்பாமல் டெல்லியிலேயே தங்கி சட்டநிபுணர்களுடனும், தமிழக அரசின் உயரதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக முதல்வர். இதனைத் தொடர்ந்து இன்று காலையில் டெல்லியின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். இது தொடர்பான சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வரைவு அனுப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர். மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் மாநில அளவில்திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஓரிருநாட்களில் நடைபெறும் என்பதால், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM