சர்வதேச கொக்கைன் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருப்பின் அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து கொக்கைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த கப்பலில் இருந்து 928 கிலோகிராம் கொக்கைன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்தே விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதிவான் லால் பண்டார விரைவில் இந்த விசாரணைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் வரை வழக்கை ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM