பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டில் அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக் கூடிய வருடமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் ஒழுக்க நெறிமிக்க சமூக சூழ்நிலையொன்றினுள் நுழைவதற்கான விரிவான ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை சமூகத்துக்கு வழங்கும் வகையில் பிறக்கிறது.
அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்தரமான ஒரு சூழலில் புதுவருடத்தை வரவேற்கக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும்.
இன்று நம் முன்பே புதியதொரு அரசியல் கலாசாரம் காணப்படுகிறது. இது இன, மத, கட்சி பேதங்களை ஒதுக்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும்.
மனித கௌரவத்தைப் பாதுகாக்கும் நிலையான அபிவிருத்தியை அடைந்த ஒரு தேசமாக எமது நாட்டை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு புது வருடத்தில் எம் முன்பு உள்ள பாரிய சவாலாக காணப்படுகிறது.
பிறக்கும் புதுவருடத்தில் பொருளாதார சமூக, அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது எமது ஒரே நோக்கமாக காணப்படுவதோடு அதற்காக வேண்டி தற்போதைய அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று செயற்படுவதற்காக சாதகமான சிந்தனை கொண்ட அனைத்து மக்களும் ஒன்றிணைவர் என நம்புகிறேன்.
2016 ஆம் வருடமானது அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக்கூடிய வருடமாக அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM