இரு தினங்களுக்கு முன் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்க நினைத்த பாஜக இளைஞர் அணித் தொண்டர்கள், அவருக்கு புதிய குர்தா ஆடையொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் உத்தரகண்ட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தான் அணிந்திருந்த குர்தா ஆடையின் பைக்குள் கையை விட்டுத் தூக்கி அது கிழிந்திருப்பதை மக்கள் முன் காட்டிய ராகுல் காந்தி, “எனது ஆடை கிழிந்திருக்கிறது. அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஏழைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி ஒரு போதும் கிழிந்த ஆடையை அணிய மாட்டார். அவர் ஏழைகளைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஏழைகளுடன் விளையாடுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவரது இந்தக் கருத்து அவருக்கு எதிராகவே திரும்பியது.
ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே வெளிநாட்டில் தனது விடுமுறையைக் கழித்துவிட்டு வந்திருந்த ராகுல் காந்தியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், பாஜக இளைஞரணித் தொண்டர்கள் ஒரு படி மேலே போய், புதிய குர்தா ஆடையொன்றை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM