பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில், தனது பதவிக்காலத்தின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடத்தினார்.
இதன் போது உரையாற்றுகையிலேயே ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனது பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தின்போது, அமெரிக்காவின் அடிப்படை நெறிமுறைகள் பாதிக்கப்படுவதாகத் தாம் உணர்ந்தால் அதற்காக எதிர்த்துக் குரல் கொடுக்க தயாராக இருப்பேன்.
நாளைய பதவி மாற்றத்துக்குப் பின்னர் எனது நேரத்தைப் பிள்ளைகளுடன் செலவிட விரும்புகின்றேன். அத்துடன் எழுதுவதற்கும் நான் கவனம் செலுத்தவுள்ளேன்.
இதேவேளை, எதிர்காலத்தில் அமைதியாக நேரத்தைச் செலவிட எதிர்பார்த்துள்ளேன்
இந்நிலையில் நாளைய தினம் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். குறித்த பதிவி மாற்றம் மிகவும் சுமுகமாக இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM