தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 212 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த 12 பேரில் ஒருவர் அதிகளவான கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்ததும் மற்றும் மன்னிப்பு வழங்கியதும் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM