தீவிரவாதிகளை தாக்குவதாக கருதி அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தவறுதலான விமானப்படை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நைஜிரியாவில் பதிவாகியுள்ளது.
நைஜிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளை தாக்குவதாக கருதி அகதிகள் முகாம் மீது அந்நாட்டு இராணுவ ஜெட் விமானமொன்று தவறுதலாக குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு எதிராக நைஜீரியா இராணுவமும் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
மேலும் குறித்த தாக்குதலில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த 20 செஞ்சிலுவை சங்க பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களும் பலியாகியுள்ளனர்.
கமரூன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள போர்னோ பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என அந்நாட்டு இராணுவ தளபதி லக்கி ரப்பார் உறுதி செய்துள்ளார்
குறித்த தாக்குதலை தொடர்ந்து மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நைஜிரிய அரச படை தாக்குதலில் இடம்பெற்ற முதல் தவறுதலான தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM