வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்தது. மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.
புதிய நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.
தற்போது இராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்தி காணியை கையளித்துள்ளது. இக் கையளிப்பு நிகழ்வில் பிரதேச செயலாளர் கா.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த 22 ஏக்கர் காணி இராணுவத்தால் விடுவிப்பு
Published By: Priyatharshan
18 Jan, 2017 | 09:59 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM