சூர்யா நடித்த சிங்கம் 3 படம் ஜனவரி 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சூர்யா இந்த படத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடாமல் தள்ளிவைத்ததற்கு காரணம் ஒரே திகதியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடவேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் தற்போது அதுவும் நடக்காது போலிருக்கிறது. காரணம் என்னவெனில் பொங்கலுக்கு வெளியான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்கள் திரையிட்ட இடமெல்லாம் நல்ல வசூலுடன் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் பட மாளிகை அதிபர்கள் தங்கள் படமாளிகையை சூர்யாவின் படமான சிங்கம் 3 க்கு கொடுப்பதற்கு யோசித்து வருகின்றனர். சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் தெலுங்குவெளியிட்டிற்கு பொறுபேற்றிருக்கும் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் தில் ராஜு ஆகியோர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பதில் இருக்கிறார்களாம். படத்தை ஒத்திவைக்க சூர்யா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சூர்யாவும் படக்குழுவினரும் தடுமாறி வருகின்றனர். பெரிய பட்ஜட் படமென்றால் இது எல்லாம் சகஜம்தானோ என்னவோ..!
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM