நுகே­கொ­டையில் 27ஆம் திகதி அர­சாங்­கத்துக்கு எதி­ரான பேரணி

Published By: Raam

17 Jan, 2017 | 09:52 AM
image

நல்­லாட்சி  அர­சாங்­கத்­திற்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது. அவ்­வே­லைத்­திட்­டத்தின் முத­லா­வது பேரணி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் இடம்­பெ­ற­வுள்­ளது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். 

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பலர் அப்­பே­ர­ணியில் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும்  அவர் குறிப்­பிட்டார். 

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இவ்­வ­ருடம் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மிகவும் தீர்க்­க­மான ஆண்­டாக அமை­ய­வுள்­ளது. ஏனெனில் அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு தவ­றி­யுள்­ளது.  அதனால் மக்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கிளர்ந்­துள்­ளனர்.   எனவே கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது அர­சியல் கட்­சிகள், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் பொது­மக்­களை  இணைத்­து­க்கொண்டு அர­சாங்­கத்திற்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் அர­சியல் கட்­சிகள் பேச்­சு­வார்­த்தை நடத்­தி­யுள்­ளன. அதற்­கி­ணங்க ஐந்து பிர­தான கார­ணங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திக்­கொண்டு எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். 

நாட்டைப் பிரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு, வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­கின்­றமை, அரச நிறு­வ­னங்­களை விற்­பனை செய்­கின்­றமை, ஊழல் மோசடி என்­ப­னவே அவை­யாகும்.  

எனவே எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் ஆரம்­ப­மா­க­வுள்ள எதிர்ப்பு பேரணியைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏனைய மாவட்டங்களிலும்  நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆகவே நாட்டைப் பாதுகாக்க நினைக்கும் சகலரும் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19