வைத்தியர் வீட்டில் கொள்ளை : சந்தேக நபர் கைது

Published By: Priyatharshan

17 Jan, 2017 | 09:38 AM
image

பூண்டுலோயா - நியங்கந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில்  கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பூண்டுலோயா வைத்தியசாலையில் பணிபுரியும் பல் வைத்தியரின் புதிய வீடு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் இடத்திலிருந்த சுமார் ரூபா 40 ஆயிரத்திறகும் மேற்பட்ட பெறுமதியுடைய கட்டுமானத்திற்கு தேவையான கருவிகள் உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக பூண்டுலோயா  பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பூண்டுலோயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுபசிங்க தலைமையில் 
மேற்கொள்ளப்பட்ட  தேடுதல்  விசாரணைகளின் போது, கொள்ளையுடன்  சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை களவுபோன பொருட்களுடன் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் அம்பாறை பகுதியைச் சேர்ந்தவரென முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி சுபசிங்க மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08