ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேரில் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த 10 பேரை ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவிலவில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற, சீன - இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின்போதே குறித்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது.
இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில்; நேற்று இரவு 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM