முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று நீராவிபிட்டி பகுதியில் ஞாயிற்றுகிழமைகளில் இயங்கிவரும் வாராந்த சந்தையை வேறு இடத்துக்கு இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாராந்த சந்தை வியாபாரிகள் சிலரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தையானது இந்த பகுதியில் இயங்க முடியாது எனவும் இதற்கென அமைக்கப்பட்ட முள்ளியவளை ஐயனார் ஆலயப் பகுதிக்கு அண்மையான இடத்தில் உள்ள கட்டடத்திலேயே இயங்கவேண்டும் எனவும் தைப்பொங்கல் வரைக்கும் மட்டுமே தற்போது சந்தை நடைபெறும் பகுதியில் இயங்க முடியுமெனவும் கடந்த முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குறித்த சந்தை இடம்பெறும் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையால் இவ்விடத்தில் சந்தை இயங்க முடியாது என அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது.
இருந்தும் நேற்றுக் காலை குறித்த பகுதியில் சந்தையினை கூட முயற்சித்த வியாபாரிகளை முள்ளியவளை பொலிசார் குறித்த பகுதியில் சந்தை இயங்க முடியாது எனவும் குறித்த இடத்தை விட்டு நகருமாறும் உத்தரவிட்டதையடுத்து பாதிக்கப்பட்ட சந்தைவியாபாரிகள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் குறித்த சந்தை வேறு இடத்துக்கு செல்வதை தாம் விரும்பவில்லை எனவும் பொருத்தமில்லாத இடத்தில் சந்தை அமைவதனால் தமக்கு எந்தவித பலனும் கிடைக்காது எனவும் உரிய தரப்பினர் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பழைய இடத்திலேயே சந்தை இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் குறித்த சந்தை அவ்விடத்தில் நேற்று இயங்காத போதிலும் அதற்கு அண்மையாக உள்ள நீராவிப்பிட்டி உள்ளக வீதியில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் வாராந்த சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Published By: Priyatharshan
16 Jan, 2017 | 08:53 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM