வவுனியாவில் நேற்று (13) இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஓமந்தைப் பொலிசார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்களிடமிருந்து கைக்குண்டு இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் காட்டில் பல காலமாக வசித்து வந்துள்ளதாகவும் கணவன் மீது மாங்குளம், ஓமந்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கசிப்பு உற்பத்தி செய்துவருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடம்; மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM