தொலைக்காட்சி பார்ப்பதில் அண்ணன் தங்கையிடையே போட்டி : இறுதியில் அதிர்ச்சி : வந்தாறுமூலையில் சோக சம்பவம்

Published By: MD.Lucias

12 Jan, 2017 | 03:08 PM
image

தொலைக்காட்சி பார்ப்பதில் அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பு வந்தூறுமூலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

விஸ்வலிங்கம், சுலோசனா தம்பதிகளுக்கு குணாலன் (18) என்ற. மகனும், கர்ஷிகா என்ற  (13) மகளும் பிள்ளைகளாவர்.

தந்தை விஸ்வலிங்கம் தொழில் நுட்ப உதவியாளராகவும், தாய் சுலோசனா   ஆசிரியையாகவும் தொழில் புரிகின்றனர்.

வழமையாக அண்ணனும், தங்கையும் தொலைக்காட்சி  பார்க்கும்போது ஆளுக்கொரு செனல் பார்க்க வேண்டுமென்பதில் சண்டை பிடித்து கொள்வதுண்டு.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அண்ணன், தங்கையான குணாலன், கரிஷீகா ஆகியோர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது தனக்கு விருப்பமான  "செனல் "மாற்றுவதில் சண்டை நடந்ததால் , அப்பா விஸ்வலிங்கம் வந்து, இருவரையும் படிக்கச் சொல்லி கூறிவிட்டு, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து அண்ணனும் தங்தையும்  எழுந்து வெவ்வேறு அறைகளுக்குள் சென்றுவிட்டனர்.

இரவு 08.45 மணியளவில் சாப்பிடுவதற்காக அழைத்த போது, மகன் வராததால், தந்தை அவரது அறையை திறந்த போது, சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் உடனடியாக சுருக்கை அவிழ்த்து செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43