சிறையில் உள்ள தனது காதலனுடன் சேர்ந்து பாதாள உலகத் தலைவன் ஒருவனின் பெயரைக் கூறி தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த பெண்ணொருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
தெமட்டகொடையைச் சேர்ந்த குறித்த பெண்ணை மாளிகாவத்தையில் வைத்து கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.
அத்துடன் இவரிடமிருந்து ஆறு கையடக்க தொலைபேசிகள், 30550 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகவும் மேற்படி பிரிவு தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட 30 வயதான குறித்த பெண் தனது காதலன் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளதாகவும் இந் நிலையிலேயே கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி ஈஷி கேஸ் முறை மூலம் கப்பம் பெற்று வந்ததாகவும் தெரிவித்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந் நிலையில் அப்பெண் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் சுமார் 80 இலட்சம் ரூபாவை இவ்வாறு பல வர்த்தகர்களிடமிருந்து கப்பமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
நேற்று முன் தினம் இரவு ஈஷி கேஸ் ஊடாக கப்பம் பெறும் நடவடிக்கை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அன்றைய தினம் மாலை வேளையிலேயே குறித்த பெண்ணை பொலிஸ் பொறுப்பில் எடுத்து விசாரணை செய்தனர். இதன் போது அப்பெண்ணிடம் இருந்த கப்பம் கோர பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 6 கையடக்கத் தொலைபேசிகளையும் 30 ஆயிரத்து 550 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இந் நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வரை குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு வர்த்தகர்கள் பொலிஸில் முறைப்பாடுகளை செய்து வருவதாகவும் அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM