சிறையில் உள்ள காதலனுடன் சேர்ந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி கைது

Published By: Robert

31 Dec, 2015 | 09:54 AM
image

சிறையில் உள்ள தனது காத­ல­னுடன் சேர்ந்து பாதாள உலகத் தலைவன் ஒரு­வனின் பெயரைக் கூறி தொலை­பேசி ஊடாக அச்­சு­றுத்தல் விடுத்து வர்த்­த­கர்­க­ளிடம் கப்பம் பெற்று வந்த பெண்­ணொ­ரு­வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்­துள்­ளது.

தெமட்­ட­கொ­டையைச் சேர்ந்த குறித்த பெண்ணை மாளி­கா­வத்­தையில் வைத்து கைது செய்­த­தாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குறிப்­பிட்­டது.

அத்­துடன் இவ­ரி­ட­மி­ருந்து ஆறு கைய­டக்க தொலை­பேசிகள், 30550 ரூபா பணம் என்­பன மீட்­கப்­பட்­ட­தாகவும் மேற்­படி பிரிவு தெரி­வித்­தது.

கைது செய்­யப்­பட்ட 30 வய­தான குறித்த பெண் தனது காதலன் ஆயுள் தண்­டனை கைதி­யாக சிறையில் உள்­ள­தா­கவும் இந் நிலை­யி­லேயே கைய­டக்கத் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்தி ஈஷி கேஸ் முறை மூலம் கப்பம் பெற்று வந்­த­தா­கவும் தெரி­வித்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார். இந் நிலையில் அப்பெண் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அவர் சுமார் 80 இலட்சம் ரூபாவை இவ்­வாறு பல வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து கப்­ப­மாக பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

நேற்று முன் தினம் இரவு ஈஷி கேஸ் ஊடாக கப்பம் பெறும் நட­வ­டிக்கை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் அன்­றைய தினம் மாலை வேளை­யி­லேயே குறித்த பெண்ணை பொலிஸ் பொறுப்பில் எடுத்து விசா­ரணை செய்­தனர். இதன் போது அப்­பெண்­ணிடம் இருந்த கப்பம் கோர பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் 6 கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் 30 ஆயி­ரத்து 550 ரூபா பணத்­தையும் பொலி­ஸார் கைப்­பற்­றினர்.

இந் நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வரை குறித்த பெண்­ணுக்கு எதி­ராக பல்­வேறு வர்த்­த­கர்கள் பொலிஸில் முறைப்­பா­டு­களை செய்து வருவதாகவும் அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13