தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இழந்துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறாமையே அவர் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு கடந்த மாதம் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சீரான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே மலிங்கவை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மலிங்க சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மலிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலிங்க கருத்து வெளியிடுகையில்,
தொடர்ந்து ஒரு வருட காலம் விளையாடாமல் இருந்து திடீரென ஒருநாள் போட்டியில் விளையாடுவது சற்று கடினமானது. அதனால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும், அதற்குப் பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடிவிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM