அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது தேரர்களின் காவி உடையை களைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அவ்வாறு பணிப்புரை விடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியில்கூட இதுபோன்று தேரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே பொலிஸ் மா அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், பிரதமரும் தேரர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடத்து அந்நடவடிக்கைக்கு எதிராக எழும் எதிர்ப்பை ஜனாதிபதியாலும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிர ஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவத்தில் அங்கு சத்தியாக்கிரகம் நடத்திய தேரர்கள் அமைதியான முறையிலேயே சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
எனினும் மட்டக்குளியிலிருந்து பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டவர்களே தேரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மட்டக்குளியிலிருந்து சென்றவர்கள் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக கற்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அமைதியான முறையில் எதிப்புத் தெரிவித்தவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் மேற்கொண்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஜனநாயக நாட்டின் ஆட்சி முறையில் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து பீடங்களைச் சேர்ந்த தேரர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM