தெமட்டகொடையில் அண்மையில் இடம் பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகா முன்வந்து தமது குற்றங்களை ஒப்புக்கொண்டாலும் அவரை குற்றவாளியாக்க அரசாங்கம் விரும்பவில்லையென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.
ஹிருணிகாவை கைது செய்வதற்கான சாட்சியங்கள் இல்லையென கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெமட்டகொடை மேம்பாலத் திற்கு அண்மையில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து அங்கு சேவையாற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகள் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கும் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் திரட்டப்பட்ட சீ.சீ.டீ.வி காணொளிகள் வாயிலாக ஹிருணிகாவின் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழுவொன்றே குறித்த இளைஞரை கடத்திச் சென்று தாக்கியதாக உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்த போது அவர் தனக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனம் தான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தாம் கடத்திச் சென்றது உண்மை ஆனால் இளைஞரை தாக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாகவே குறித்த இளைஞரை கடத்திச் சென்றதாகவும் ஒப்பு கொண்டிருந்தார்.
ஆனால் அவர் ஒப்புக்கொண்டதன் பின்னரும் குற்றத்தடுப்பு பிரிவு ஹிருணிகாவை கைது செய்வதற்கான போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம்.
இந்த விடயத்தின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருக்கின்றமை குறித்து நாம் அறியாததல்ல. அதனால் இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை அரசாங்கம் பாதுகாக்க முயற்சிக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் என்னைப்பற்றி ஹிருணிகா அவதூறு பேசியமை க்காக 500 மில் லியன் ரூபா நஷ்டயீடு கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள் ளேன் அதிலும் எனக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM