ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 48 தீவிரவாதிகளை தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்பு கொன்றுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் அட்டூழியங்களுக்கு எதிராக செயற்படும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அயல் நாடான துருக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது.
ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக தரை, வான் வழியாக தாக்குதல் நடத்தும் துருக்கி இராணுவம், சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்றைய தினம் துருக்கி இராணுவம் நடத்திய தொடர்ச்சியான அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு அவர்களது முகாம்கள் மற்றும் ஆயுதகளஞ்சியங்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM