சீனாவுடனான ஒப்பந்தம் நிறுத்தப்படுமாயின் நாட்டு மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படுமென உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் சீனாவிற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்குவதால் நாட்டிற்கு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். வெறுமனே பொறாமைப்பட்டு நாட்டு மக்களை பழி வாங்க நினைக்கும் கூட்டு எதிரிணியினர் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க விரும்புகின்றனரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சீனாவிற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்குவதால் நாட்டிற்கு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். அதனை மறுக்க முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கென தீர்க்கமான சில முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஒரு தொழிற்சாலையையேனும் அமைத்துக்கொள்ள முடியாமற்போனது.
ரணசிங்க பிரேமதாஸ காலத்தில் திறந்து வைக்கப்பட்ட 300 தொழிற்சாலைகளில் 150 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் மாத்திரமல்ல, மொணராகலை, காலி மற்றும் மாத்தறையிலும் காணிகளை வழங்கவுள்ளோம். தொழில்வாய்ப்புகள் உருவாவதற்கு எதிராக ஏன் செயற்படுகின்றார்கள்.? சீன நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்குவதால் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இந்த நிதியை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளாவிட்டால் வரியை அதிகரிக்க வேண்டி ஏற்படும். வற் வரியையும், அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும்.
ஆகவே வரிச்சுமையை அதிகரிக்காமலிருக்க வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து 1.1 பில்லியன்களை பெற்றுக்கொள்ளாமல் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்குமாறா கூட்டு எதிர்க்கட்சி கேட்கின்றது? இதற்கு பதில் வேண்டும். பொறாமையில் செய்யும் விடயமே இதுவாகும்.
ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். அவர்கள் இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமானவற்றை செய்தே ஆக வேண்டும். அதனை பொறாமைக்கண்ணோடு பார்ப்பதால் நமது நாட்டு மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM