உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயற்பாடாகும். ஆகவே வெகுவிரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை இப்போதைக்கு சாத்தியமில்லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையை கொண்டுவரும் சாத்தியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கருதரங்கின் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் காலம் மற்றும் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையின் சாத்தியத்தன்மை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் வாக்கெடுப்பின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. எனினும் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான சாத்தியங்கள் இல்லை. காரணம் என்னவெனில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நிலையில் அதை சரியான முறையில் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
அதேபோல் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நவீன தொழிநுட்ப முறைமை மீது மக்களுக்கான நம்பிக்கையை பலப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் ஒரே தடவையில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையை நடைமுறைப்படுத்த இயலாது. பரிட்சார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாதிரி தேர்தல் ஒன்றை நடத்தி அல்லது குறிப்பிட்ட ஒருசில பகுதியிலாவது இந்த முறைமைகளை நடைமுறைப்படுத்தி பார்க்க வேண்டும். எனினும் இப்போது இருக்கும் நவீன யுகத்தில் இவ்வாறான நகர்வுகள் சகல நாடுகளிலும் விரைவாக பிரசித்திபெற்று வருகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் இந்த தேர்தல்களில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமைகள் கொண்டுவரப்படாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் இலத்திரனியல் முறைமைகள் கையாளப்படும் சாத்தியங்கள் உள்ளன.
மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என சகல அரசியல் கட்சிகளும் கூறுகின்றன . தினமும் ஒரு கட்சியேனும் தேர்தல்கள் திணைக்களம் வந்த வண்ணமே உள்ளன. எனினும் இவர்கள் எம்மிடம் வந்து வலியுறுத்தினாலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை. மக்கள் வரம்பெற்ற பாராளுமன்றமே தேர்தலை எப்போது நடத்துவது என தீர்மானிக்க வேண்டும்.
பாராளுமன்றம் அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது. ஆகவே அமைச்சர் தான் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் தேர்தல்கள் ஆணையகத்துக்கு தேர்தலை நடத்தும் அதிகாரம் இல்லை. சுயாதீன ஆணைக்குழு என்றாலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் எமக்கு இல்லை. உலகில் எந்தவொரு தேர்தல்கள் திணைக்களத்திற்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவி்லலை.
ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். குறித்த காலத்தினுள் அரசாங்கம் தேர்தலை நடத்தாது உள்ளதை நாமும் விரும்பவில்லை. வெகு விரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். காலத்தை கடத்தி ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM