தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான "அனுமன்" பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.
இப் பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் ஆழிலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத்தன்மையையும் பாதிப்படையச் செய்யும் என்றும் அரசாங்கம் நேற்று அறிவித்தது.
பெலவத்தையிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு சார்பில் கருத்து தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த அறிவிப்பை விடுத்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் தமிழ் நாட்டின் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையேயான "ஹனுமான்" பாலம் அமைக்கப்பட மாட்டாது என பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். தனது இந்திய விஜயத்தின் போது இப் பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலையில் இந்திய மத்திய அரசின் அமைச்சரொருவர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அது தொடர்பாக இலங்கையுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் எமது அரசாங்கம் தொடர்பாக எதுவித செய்தியும் இல்லாத நிலையிலும் வரவு செலவு திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வெற்றி கொண்டதாலும் அரசை விமர்சிக்க செய்திகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
உதயகம்பன்பில போன்றவர்கள் ஹனுமன் பாலம் தொடர்பில் இந்திய அமைச்சின் கருத்தை பெரிதுபடுத்தி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தேசப்பற்று தொடர்பாக பேசும் கம்மன்பில உள்நாட்டில் பிரதமர் சொன்னதை நம்பாது இந்திய மத்திய அமைச்சர்கள் கூறியதை நம்பி பேசுகிறார். அதன் மூலம் அவரது அரசியல் வங்குரோத்து நிலை புலப்படுகிறது.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்கனவே சேது சமுத்திரம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது இந்தியாவிற்குள்ளே எதிர்ப்பு தோன்றியது. சூழல் பாதிக்கப்படும், உயிரியல் பன்முகத்தன்மை அழிவுக்குள்ளாகும் என கடும் எதிர்ப்பு தலைதூக்கியதால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டது. இதேபோன்று ஹனுமான் பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனைக்கும் அந் நாட்டுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும்.
எமது நாட்டுக்கு ஹனுமான் பாலம் அவசியமில்லை. இந்திய அமைச்சரின் யோசனையை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். நிராகரிக்கின்றோம் என்றார். இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்மையில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 35000 கோடி ரூபாவை வழங்க தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேசப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM