தென் கொரியாவானது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானால் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் தொடர்பில் அந்நாட்டுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய பௌத்த மதகுரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
குறிப்பிட்ட 64 வயது மதகுரு சனிக்கிழமை இரவு மத்திய சியோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்தவாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடும் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் சியோல் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சியோல் நகரில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 11 ஆவது வாரமாக சனிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன
ஜப்பானுடன் மேற்படி பாலியல் அடிமைகள் தொடர்பில் இழப்பீட்டு முன்னேற்பாட்டு உடன்படிக்கையொன்றை கடந்த ஆண்டு செய்து கொண்டதன் மூலம் ஜனாதிபதி பார்க் கெயுன்–ஹை இராஜத் துரோகமொன்றை இழைத்துள்ளதாக தீக்குளித்த மதகுரு குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்படி கொரிய பெண்கள், ஜப்பானிய போர் கால இராணுவ விபசார விடுதிகளில் பணியாற்ற அந்நாட்டு இராணுவத்தினரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் நஷ்டஈட்டை வழங்கி மன்னிப்பைக் கோருவதன் மூலம் அந்தப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது.
மேற்படி உடன்படிக்கை ஜப்பானால் போர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காக அந்நாட்டை பொறுப்புக் கூறவைப்பதற்கு போதுமானதாக இல்லை என அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாலியல் அடிமைகள் தொடர்பான மேற்படி சர்ச்சையின் அங்கமாக தென் கொரியாவிலிருந்து தனது தூதுவரை ஜப்பான் கடந்த வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றதையடுத்து இரு நாடுகளுக்கு மிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM